LGBTQ+ - சென்னையை திரும்பிப் பார்க்க வைத்த சுயமரியாதைப் பேரணி

காணொளிக் குறிப்பு, LGBTQ+ - சென்னையை திரும்பிப் பார்க்க வைத்த சுயமரியாதைப் பேரணி
பிரசுரிக்கப்பட்டது

வீடுகளில் தொடங்கும் LGBTQ+ சமூகத்தினர் மீதான ஒடுக்குமுறைகள், கட்டாயப்படுத்தப்படும் இரட்டை விகுதி பாலினம், எதிர்பாலீர்ப்பு கட்டமைப்புகள், ஆணாதிக்கக் கட்டமைப்புகள், இன்றளவும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு தளங்களில் இந்த சமூகத்தினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்.

சென்னை வானவில் சுயமரியாதை பேரணி, எங்களுடைய இருப்பு, மாண்பு, சுயமரியாதை மற்றும் இந்த நாட்டின் குடிமக்களாக எங்களின் முழு உரிமைகளைப் பற்றிய சுய உணர்தல் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாக இந்த சமூகத்தினர் கூறுகின்றனர்.

இவர்களுக்குள்ள மனக்குறைகளும் குமுறல்களும் என்ன? விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: