கணக்கில் 35, ஆங்கிலத்தில் 36 மார்க் எடுத்தவர், இப்போது ஆட்சியர்

பிரசுரிக்கப்பட்டது

"ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36. 10-ஆம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் இவ்வளவுதான். கல்லூரி சேர்க்கைக்காக படிவம் நிரப்பும்போது, என் சொந்தப் பெயரை எழுதுவதில் கூட பிழை செய்தேன். ஆனால், உறுதியான நம்பிக்கையும் கடின உழைப்பும் என்னை ஐஏஎஸ் ஆக்கின."

குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேராவின் வார்த்தைகள் இவை. இவரைப் பொறுத்தவரை, உங்கள் மதிப்பெண்களுக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒருபோதும் தொடர்பில்லை.

அண்மையில், இவரது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வேகமாகப் பரவி வந்த நிலையில், தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனது எப்படி என்ற தன் பயணம் குறித்து பிபிசி குஜராத்தி சேவையுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: