சென்னையிலும் அக்னிபத் போராட்டம்: தலைமைச் செயலகம் முன் போராடியது ஏன்?
"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை தலைமைச் செயலகம் அருகே தேசியக் கொடியுடன் முன்னறிவிப்பின்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே சர்ச்சையாகி வந்த நிலையில், நாடு முழுக்கப் பல்வேறு மாநிலங்களில் இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வேலூரில் கவனிக்கத்தக்க வகையில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
'அக்னி பத்' திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்