சேலம் மல்கோவா மாம்பழத்தின் வரத்து குறைவதற்கு காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, சேலம் மல்கோவா மாம்பழத்தின் இன்றைய நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

“மல்கோவா மாம்பழம் இந்த ஆண்டு வரத்து குறைவு என்று விவசாயிகள் கூறுகின்றனர். சீசன் நேரத்தில் பூக்கள் கொட்டிவிட்டதே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே, இதன் காரணமாக மே மாதத்தில் மாம்பழம் குறைவாக வரும் என்று கூறினார்கள். அல்ஃபோன்சா, இமாம் பசந்த் ஆகிய வகைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மக்கள் அதிகமாக விரும்புவது சேலத்தின் மல்கோவா மாம்பழத்தைத்தான்.

அதன் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதையே கேட்கிறார்கள். இந்த ஆண்டு அதன் வரத்து குறைவாக இருப்பதால், அதன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை,” என்று கூறுகிறார் பழ வியாபாரி, அர்ஜூன்.

மல்கோவா மாம்பழத்தின் வரத்து குறைவதன் காரணம் என்ன?

தயாரிப்பு: சுதாகர்

படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: