You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - பின்னணி என்ன?
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வரியைக் (VAT) குறைத்த அதேநேரம், மத்திய அரசு தமது பங்குக்கு வரியைக் குறைத்து மக்கள் சுமையைப் போக்க உதவவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் நீங்கலாக மற்ற மாநில அரசுகள் சமீப காலம் வரை குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், மத்திய கலால் வரியைக் குறைக்கும் அறிவிப்பை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்