சொத்து வரியை அதிகரித்த தமிழக அரசு: புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு முழுக்கவுள்ள நகராட்சிகள் முதல் பேரூராட்சிகள் வரை, சொத்து வரியை அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

1920-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய அரசினுடைய 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை இரவு தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: