"விளையாட்டுத் துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அதிகம் வர வேண்டும்”

பிரசுரிக்கப்பட்டது

பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனைகளுக்கான விருது விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

அப்போது, “கிராமப்புறத்தில் நான் எனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினேன். அதன்பிறகு, நகர்ப்புறத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். விளையாட்டு அனைவருக்கும் சிறுவயதில் இருந்தே ஆர்வம் அளிக்கக்கூடிய ஒன்று. ஆனால், அதில் நான் பெரியளவில் ஈடுபடவில்லை என்பது இன்னமும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது,” என்று கூறினார்.

அவருடைய முழு உரையை காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: