திருப்பதி அருகே பேருந்து பள்ளத்தில் விழுந்து 8 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது

திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக 54 பேருடன் அனந்தபூர் வரை சென்று கொண்டிருந்தது அந்தப் பேருந்து, திருப்பதிக்கு முன்பாக சென்று கொண்டிருந்தபோது, பாகர்பேட்டா பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: