தமிழக கிராமங்களில் பட்டியலின மக்களை ஒடுக்கும் தடுப்புச்சுவர்களா? கள நிலவரம்

காணொளிக் குறிப்பு, தமிழக கிராமங்களில் பட்டியலின மக்களை ஒடுக்கும் தடுப்புச்சுவர்களா? கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தீண்டாமை சுவர்களை எழுப்பி பட்டியலின மக்களை ஒடுக்கும் வகையிலான செயல்பாடுகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இங்குள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் அருகே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக பட்டியலின மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இங்கு மட்டுமின்றி பூவளை கிராமம், தோக்கமூர் கிராமத்திலும் இதேபோன்ற பாகுபாடு போக்கை மக்கள் எதிர்கொள்வதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இங்குள்ள கள நிலவரத்தை பார்வையிட்டு பிபிசி தமிழ் வழங்கும் சிறப்புச் செய்தியை இந்த காணொளியில் பார்க்கலாம்.

காணொளி தயாரிப்பு: ஆ. விஜயானந்த், ஒளிப்பதிவு: ஜெரீன் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: