போலீஸ் துப்பாக்கி தோட்டா துளைத்ததில் உயிரிழந்த சிறுவன் - சோகத்தில் கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி தோட்டா ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த சிறுவனின் தலையை துளைத்தது.
புகழேந்தி என்ற அந்த சிறுவனின் வயது 11. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறுவனின் உயிர் ஜனவரி 3ஆம் தேதி பிரிந்தது. அந்த சிறுவனின் இழப்பால் அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் இந்த துப்பாக்கி பயிற்சி தளம் குறித்தும் சிறுவனின் மரணம் குறித்தும் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- கல்வானில் இந்திய கொடி: நரேந்திர மோதி அமைச்சர்கள் பெருமிதம் - கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி
- ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் முள்வேலிகளை அகற்றும் தாலிபன்கள் - என்ன நடக்கிறது?
- இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?
- அம்மா மினி கிளினிக் மூடல்: ஜெயலலிதா புகழை மங்கவைக்க தி.மு.க முயற்சியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்