நரேந்திர மோதியை நேருக்கு நேர் விமர்சிக்கும் மாநில ஆளுநர் - அரசு மெளனத்துக்கு என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதியை நேருக்கு நேர் விமர்சிக்கும் மாநில ஆளுநர் - அரசு மெளனத்துக்கு என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

'பிரதமர் மோதி மிகவும் திமிரு பிடித்தவர்'' என்று கூறிய சத்ய பால் மாலிக், நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று சொன்னபோது, 'அவர்கள் என்ன எனக்காகவா இறந்தார்கள்?' என்று கேட்டார் மோதி.

அதற்கு நான், 'நீங்கள்தானே இந்தியாவின் பிரதமர்' எனக் கூறி அவருடன் வாக்குவாதம் செய்தேன். பிறகு 'இந்த விவகாரம் பற்றி அமித் ஷாவிடம் பேசுங்கள்' என்று கூறினார் மோதி. அமித் ஷாவிடம் மோதியின் பேச்சு பற்றி நான் குறிப்பிட்டபோது, 'அவர் ஏதோ பேசி விட்டார் விடுங்கள்' என்று தெரிவித்தார் என்றார் சத்ய பால் மாலிக்.

ஆனால், மோதியை இப்படி விமர்சிப்பது இது முதல் முறையல்ல. அவரது சர்ச்சை பேசச்சுகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்கிறது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: