ஆற்று வெள்ளத்தால் தடைபடும் கல்லூரி மாணவரின் கல்வி

காணொளிக் குறிப்பு, ஆற்றைக் கடந்து கல்வி கற்கும் கல்லூரி மாணவர்
பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் மோதிரை மலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் கிருஷ்ணா. இவர் மார்தாண்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் ரப்பர் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜய் குமார் கல்லூரிக்கு கோதையார் தரை பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

அப்போது அந்த தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் காலையில் கல்லூரிக்கு செல்லும் மாணவர் அஜய் கிருஷ்ணா மாலை தனது வீட்டிற்கு திரும்ப முடியாமல் ஆற்றின் மறு பக்கம் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும் இரவு நேரங்களில் மழை பெய்தாலும், காற்றடித்தாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும். இதனால் மலைவாழ் மக்கள் இக்கிராமத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :