ஆமதாபாதின் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சிக் காணொளி
ஃப்ளோரா அசோதியா, ஏழாம் வகுப்பு மாணவி. கலெக்டராக வேண்டும் என்பது இவரது கனவு.
"ஃப்ளோரா காந்திநகரைச் சேர்ந்தவர் மற்றும் மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த மாதம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேக்-ஏ-விஷ் அறக்கட்டளையிலிருந்து அந்த சிறுமி கலெக்டர் ஆக விரும்புகிறார் என்று எங்களுக்கு செய்தி வந்தது" என்று ஆமதாபாத் கலெக்டர் சந்தீப் சாங்லே கூறினார்.
உடனடியாக ஃபுளோராவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவரது கனவை நனவாக்க கலெக்டர் சந்தீப் சாங்லே விருப்பம் தெரிவித்தார். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஃபுளோராவின் நிலை மோசமடைந்ததால் பெற்றோர் தயங்கினர். பிறகு அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஃபுளோராவுக்கு ஆட்சியருக்கான பொறுப்புகளை சந்தீப் சாங்லே விளக்கினார். அடுத்த வாரம் அவரது பிறந்தநாள். அதை முன்கூட்டியே ஆட்சியர் அலுவலகத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
நெகிழ்ச்சிகரமான இந்த காணொளியை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்