தமிழ்நாட்டில் ஒரு இசை கிராமம்: தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் நிரம்பிய சின்னவேடம்பட்டி

பிரசுரிக்கப்பட்டது

கோவை மாநகரில் உள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் அதிக எண்ணிக்கையில் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள வாத்தியக்காரர் வீதியில் சுமார் 500 இசைக்கலைஞர்கள் வசிக்கின்றனர்.

1940 முதல் இங்கு இவர்கள் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூட ஆர்வமாக தவில் மற்றும் நாதஸ்வர இசை வாத்தியங்களை இசைக்க கற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் சென்று இவர்கள் இசைக்கின்றனர்.

செய்தியாளர்: மு ஹரிஹரன்

ஒளிப்பதிவு: மதன்பிரசாத்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :