You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸின் புதிய இரட்டை பிறழ் திரிபு: கடும் அதிர்ச்சியில் இந்தியா, என்ன நிலைமை?
பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸின் புதிய இரட்டை பிறழ் திரிபு இந்தியாவில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பரவலாக சேகரிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
சேகரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 787 மாதிரிகளில், பிரிட்டனில் பரவிய வைரஸ் பிறழ் திரிபு 736 மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது. இதேபோல, 34 வைரஸ் திரிபு, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒரு திரிபு பிரேஸிலில் உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒத்துப் போகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இந்த ஆய்வறிக்கை விவரம் வெளிவந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: