மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் என்ஐஏ விசாரணையில் தினமும் வெளிவரும் புதிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது
பிப்ரவரி 25 அன்று காலை மும்பையின் மையமான பகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் ஏற்றிய கார் ஒன்று பிடிபட்டது.
அடுத்த சில நாள்களில், அந்த வண்டியின் உரிமையாளர் என்று சொல்லப்படுகிறவரின் சடலம், மும்பை கடற்கரையில் கரை ஒதுங்கியது. அந்த நபருக்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஏராளமான கேள்விகள் நிறைந்த இந்த மர்மக் கதையை தற்போது மத்திய அரசின் தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?
- கோவிட்19 தொற்று புரளிக்குப் பின் இறந்த தான்சானியா அதிபர்
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்