செங்கோட்டையை கைப்பற்றிய விவசாயிகள்- என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி காவல்துறையின் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு முன்னேறிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி, குடியரசு தின அணிவகுப்பு நிறைவுறும் செங்கோட்டையை அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றான செங்கோட்டைக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்கும் வகையில், அதன் வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்களது வசமிருந்த கொடியை அங்குள்ள கம்பத்தில் ஏற்றி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்