கருணாநிதி வேல் யாத்திரை சென்ற கதை தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தின் இறுதியில், அவருக்கு வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களிடம் நேரடியாக உரையாடிய ஸ்டாலின், அடுத்ததாக, 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கவுள்ளார். இந்த நேரத்தில், கிராமசபை கூட்ட நிகழ்ச்சி முடிவில், திருத்தணி திமுகவினர் அவருக்கு வெள்ளி வேல் ஒன்றை பரிசாக கொடுத்தனர்.
கோயம்புத்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கடவுளை விமர்சித்துப் பேசிய ஸ்டாலின் கையில் வேல் கொடுத்திருக்கிறார்கள் என்று குறை கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்