மசினகுடி யானைக்கு தீ வைத்த வீடியோ வெளியானது

பிரசுரிக்கப்பட்டது

மசினகுடியில் யானைக்கு தீ வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஒருவரை தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீவிர காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சிகிச்சைப் பலனின்றி இருதினங்களுக்கு முன் உயிரிழந்தது.

இந்த யானை ஊருக்குள் வந்தபோது சிலர் அதன் மீது பெட்ரோல் ஊற்றிய சாக்கை தூக்கி எரிந்து பின்னர் நெருப்பு வைத்தாகவும், ஆசிட் போன்ற திரவங்களை வீசி காட்டுக்குள் விரட்ட முயற்சித்த போது ஏற்பட்ட காயத்தால் யானை உயிரிழந்ததாகவும் வனவிலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

இன்று அந்த யானையை விரட்ட அதன் மீது எரிந்து கொண்டிருக்கும் பொருள் ஒன்றை வீசிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :