நரேந்திர மோதி உரையால் போராடும் விவசாயிகள் அதிருப்தி

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி உரையால் போராடும் விவசாயிகள் அதிருப்தி
பிரசுரிக்கப்பட்டது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்கட்சிகள் திசை திருப்ப முயல்வதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மோதி, புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் தங்களுடைய வருவாயை பெருக்கிக் கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பு என்று தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களில் அந்த சட்டங்களின் பலன்களை விவசாயிகள் காண்பார்கள் என்று அவர் கூறினார்.

கடன் தள்ளுபடி என்பது ஒரு வகை பித்தலாட்டம் என்று கூறிய மோதி, எதிர்கால நலன்கள் என்ற பெயரில் இல்லாத ஒன்றை கூறி விவசாயிகளை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்ததாக தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :