RCEP: இந்தியா இல்லை; இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

காணொளிக் குறிப்பு, RCEP: இந்தியா இல்லை; மீண்டும் சீன ஆதிக்கம் - எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பிரசுரிக்கப்பட்டது

பதினைந்து நாடுகள் சேர்ந்து உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளது. இது உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP)என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

அந்த பிராந்தியத்தில் சீன தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்க வெளியேறியதால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க சேர்க்கப்படவில்லை.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற சிறிது காலத்தில் ஆஸ்திரேலியா, சில்லி, கனடா, ஜப்பான் உட்பட 12 நாடுகள் கொண்ட ட்ரான்ஸ் பசிபிக் பாட்னர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

இந்த ஒப்பந்தம் டிரம்புக்கு முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: