மாட்டு சாணத்தில் இருந்து அகல் விளக்கு: நல்ல வருவாய் ஈட்டும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் உள்ள கிராம சுய உதவி குழு பெண்களுக்கு தனியார் வேளாண் பயிற்சி தொண்டு நிறுவனம் மூலமாக மாட்டு சாணத்தில் இருந்து அகல் விளக்குகளை தயாரிக்கும் இலவச பயிற்சி கற்று கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு சுய தொழில வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் தயாரிக்கும் இவர்கள் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர். மாட்டு சாணத்தால் இவர்கள் தயாரிக்கும் அகல் விளக்குகள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
குறிப்பாக, கொரோனா சூழலில் வருமானம் இன்றி தவித்த நிலையில், இந்த புதுமையான முயற்சி நல்ல பலனை கொடுத்துள்ளதாக இந்த பணியில் ஈடுபடும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக
பிற செய்திகள்:
- இந்தியா - பாகிஸ்தான் எல்லை மோதல்: படையினர், பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் 14 பேர் பலி
- நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் பிற ஓடிடி செயலிகள் இனி மத்திய அமைச்சகத்தின் கீழ்: விளைவுகள் என்ன?
- மௌனம் கலைத்து பைடனுக்கு வாழ்த்து சொல்லிய சீனா
- விவாகரத்து, மது அருந்துதல்: கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: