You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய - சீன எல்லை பதற்றம்: தங்களிடம் பிடிபட்ட சீன ராணுவ வீரரை என்ன செய்தது இந்தியா?
இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்த பகுதியின் டெம்சோக் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சீன வீரரை இந்திய ராணுவத்தினர் திங்கட்கிழமை பிடித்துள்ளனர்.
தற்போது கடுமையான பனி நிலவும் அந்த பகுதியில் போதுமான கவச உடை, ஆக்சிஜன் வசதியில்லாமல் யாராலும் அதிக நேரம் இயல்பாக சுவாசிக்க இயலாது. இந்த நிலையில், எல்ஏசி பகுதியில் அந்த சீன வீரர் தவறுதலாக இந்திய வீரர்கள் இருக்கும் பகுதியை நோக்கி வந்து விட்டதாக சீன ராணுவம் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து காணாமல் போன அந்த சீன வீரரை தேடிய இந்திய படையினர், அவரை கடைசியில் கண்டுபிடித்தனர். அவருக்கு மருத்துவ உதவி, உணவு மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை வழங்கிய வீரர்கள், அவர் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் சீன ராணுவத்திடம் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: