You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைன் ரம்மியால் விரக்தி: புதுச்சேரியை சேர்ந்தவர் தற்கொலை
புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் செல்போன் சிம் கார்டு நிறுவனத்தில் மொத்த விற்பனையாளராக இருந்த இவர், கொரோனா பொது முடக்க காலத்தில் பொழுது போக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி தன்னிடமிருந்த சேமிப்பு பணம் முழுவதையும் இழந்த அவர், உறவினர்கள் நண்பர்களிடம் ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருக்கிறார். அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மனைவியின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு உருக்கமான ஒலிப்பதிவை அனுப்பியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: