You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை - என்ன சொல்கிறார் பிரசவம் பார்த்த மருத்துவர்
இன்று யோசித்து பார்த்தால் அதுகுறித்து மலைப்பாகதான் உள்ளது. ஆம் பறக்கும் விமானத்தில் இந்தியாவில் முதன்முதலாக பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. படத்தில் உள்ள இந்த மருத்துவர்தான் பிரசவம் பார்த்தவர்.
அவருக்கு கத்தரிக்கோல், சானிடைசர், துணி, எல்லாம் கிடைத்ததுதான் ஆனால் யோசித்துபார்த்தால் இது ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்கிறார் அவர். பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி மருத்துவர் ஷைலஜா வல்லபாநேனியை தொடர்பு கொண்டு பேசினார்.
விமானத்தில் இருந்த பயணிகள் அவருக்கு தொடர்ந்து உதவிபுரிந்தனர். துண்டு, டயஃபர், என தேவையான பொருட்களை வழங்கினர், பிரசவத்திற்கு பிறகு தாயை மேல் தூக்கி படுக்க வைக்க பைகள் என அனைத்தும் வழங்கினர். பிளாஸ்டிக் சர்ஜரியன் ஒருவரும் உதவி புரிந்தார்.
"நான் இதை செய்தேன் என என்னால் இன்னும் நம்பமுடியவில்லை." என்கிறார் மருத்துவர் ஷைலஜா வல்லபாநேனி. இவர்தான் இரு தினங்களுக்கு முன் டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தவர்.
பிற செய்திகள்:
- பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: எப்படி நடந்தது அந்த `அதிசயம்` - மருத்துவரின் ஆச்சரிய அனுபவம்
- 'என் பெற்றோர் மதுவிற்கு அடிமை..' பிக் பாஸ் பாலாஜி கண்ணீர்
- கேதர் ஜாதவ் நீக்கம், தமிழக வீரர் சேர்ப்பு - CSK வெற்றிப்பாதைக்கு திரும்புமா?
- KKIP Vs KKR: 360 டிகிரியில் சுழன்று விளாசிய தினேஷ் கார்த்திக் - பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கொல்கத்தா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: