பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை - என்ன சொல்கிறார் பிரசவம் பார்த்த மருத்துவர்

பிரசுரிக்கப்பட்டது

இன்று யோசித்து பார்த்தால் அதுகுறித்து மலைப்பாகதான் உள்ளது. ஆம் பறக்கும் விமானத்தில் இந்தியாவில் முதன்முதலாக பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. படத்தில் உள்ள இந்த மருத்துவர்தான் பிரசவம் பார்த்தவர்.

அவருக்கு கத்தரிக்கோல், சானிடைசர், துணி, எல்லாம் கிடைத்ததுதான் ஆனால் யோசித்துபார்த்தால் இது ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்கிறார் அவர். பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி மருத்துவர் ஷைலஜா வல்லபாநேனியை தொடர்பு கொண்டு பேசினார்.

விமானத்தில் இருந்த பயணிகள் அவருக்கு தொடர்ந்து உதவிபுரிந்தனர். துண்டு, டயஃபர், என தேவையான பொருட்களை வழங்கினர், பிரசவத்திற்கு பிறகு தாயை மேல் தூக்கி படுக்க வைக்க பைகள் என அனைத்தும் வழங்கினர். பிளாஸ்டிக் சர்ஜரியன் ஒருவரும் உதவி புரிந்தார்.

"நான் இதை செய்தேன் என என்னால் இன்னும் நம்பமுடியவில்லை." என்கிறார் மருத்துவர் ஷைலஜா வல்லபாநேனி. இவர்தான் இரு தினங்களுக்கு முன் டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: