இந்தியாவில் தடுப்பூசி எப்போது தயாராகும்?
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவேக்சின், ஜைகோவ்-டி மற்றும் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு ஆகிய 3 தடுப்பு மருந்துகளையும் மனிதர்களுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறவர்களுடன் 'சண்டே சம்வத்' தளத்தின் மூலம் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது அவர், "அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 20 முதல் 25 கோடி பேருக்கு, 40 முதல் 50 கோடி 'டோஸ்' தடுப்பு மருந்து போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதற்கான முன்னுரிமை பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவிடப்படும். இதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது" என உறுதிபட குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :