கனிமொழி இந்தி உரையை மொழிபெயர்த்தாரா?
மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம், "நீங்கள் இந்தியரா?" என சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த பெண் காவலர் கேள்வி எழுப்பிய சம்பவம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் சமீபத்திய டிவிட்டர் தகவலால் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் இடைவெளிவிட்டு தொடர்ச்சியான இடுகைகளை ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
அவற்றில், "கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு" என்று ஹெச். ராஜா கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஹெச். ராஜா குறிப்பிட்டது போல, 1989-ஆவது ஆண்டில் சென்னையில் நடந்த கடற்கரை தேசிய முன்னணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய துணை பிரதமர் தேவி லாலின் உரையை தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு கனிமொழி பெயர்த்தாரா? என்ற தகவலின் உண்மைத்தன்மையை பிபிசி அறிய முயன்றது.
ஹெச். ராஜாவின் டிவிட்டரில் குறிப்பிட்டது போல, கருணாநிதிக்கு இந்தி மொழியாக்கம் செய்தீர்களா? என கனிமொழியிடம் பிபிசி கேட்டபோது, "அத்தகைய மொழிபெயர்ப்பு சம்பவமே நடக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், " ஹெச். ராஜாவின் ஆதாரமற்ற டிவிட்டருக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது" என்றும் கனிமொழி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? மன்மோகன் சிங் வழங்கும் 3 யோசனைகள்
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 11 பேர் பலி
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: