You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் தொழிலாளி பெயரில் மசூதி: இந்துவாக இருந்து மதம் மாறியவர்
புனேவை சேர்ந்த ஒரு பிராமணப் பெண், 1800களில் டெல்லியில் அதிகாரம் மிக்க பதவியிலிருந்த வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டு 'முபாரக் பேகம்' என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
டெல்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் 'ரண்டி கி மஸ்ஜித்' என இந்த மசூதி அழைக்கப்பட்டது. இப்போதும் பலருக்கு இந்த பெயர் பிரபலம்.
ரண்டி என்ற சொல் பாலியல் தொழிலாளிகளை தரக்குறைவாக அழைக்க, இந்தியில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு பாலியல் தொழிலாளியின் பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளதா எனப் பலரும் வியப்படையலாம்.
இந்த மசூதியைக் கட்டியவர் யார் என்பதில் குழப்பம் இருந்தாலும், இந்த மசூதி ஒரு பாலியல் தொழிலாளியால் அல்லது அவரது நினைவாகக் கட்டப்பட்டது என்பதே உண்மை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: