விமானத்தில் ஒரு தமிழ் குரல்; யார் அந்த விமானி?

பிரசுரிக்கப்பட்டது

விமானத்தில் தகவல்களைத் தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

அவர் விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளியும் வைரலாக சென்றது.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் அந்த விமானத்தில் அவர் தமிழில் காவிரி, கொள்ளிடம், ரங்கநாதர் குறித்து தமிழில் அறிவிப்பு அளிக்கிறார்.

தமிழகத்திற்குப் பறக்கும் விமானங்களில் கூட தமிழில் அறிவிப்புகளைச் செய்வது இல்லை என பலர் ஆதங்கத்துடன் சமூக ஊடகங்களில் எழுதி இருக்கின்றனர். இப்போது அவர்கள் பெருமிதத்துடன் இந்த விமானியைக் கொண்டாடி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: