கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்தியாவில் தடுப்பு மருந்துகள் எவ்வாறு சோதிக்கப்படுகின்றன?

பிரசுரிக்கப்பட்டது

டெங்குவுக்கு 50 ஆண்டுகளாக தடுப்பு மருந்து கண்டறிய போராடிகொண்டிருக்கும் வேளையில், கொரோனா தொற்றுக்கு உடனே மருந்து வந்துவிடும் என நாம் எண்ணுவது நம் எதிர்பார்ப்பை காட்டுகிறது என்கிறார் ஒய்வு பெற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானி மாரியப்பன்.

தடுப்பு மருந்து கண்டறிய காலக்கெடு நிர்ணயம் செய்வது சிரமமான காரியம் என்றும் ஒரு தடுப்பு மருந்து உருவாக நான்கு நிலைகளில் பல்வேறு மக்கள் திரளிடம் அந்த மருந்தை சோதனை செய்து பார்க்கவேண்டும் என்பது ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலில் உள்ளது என்கிறார் முன்னாள் ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி மாரியப்பன்.

இந்தியாவில் எல்லா தடுப்பு மருந்துகளும் விரிவான நான்கு முக்கிய படிநிலைகளில் பரிசோதிக்கப்படும் என்றார் அவர்.

பின்னர் மனிதர்கள் மீது நடத்தப்படும் நான்கு நிலையான பரிசோதனைகள் குறித்து விவரித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :