You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி பேசும் முன்பே தற்சார்பு குறித்து பேசிய பிகார் பெண் மனோரமா
தற்சார்போடு செயல்படும் இந்திய கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழலிலும் வறுமையில் சிக்காமல் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிகாரின் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த மனோரமா சிங், காளான் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறார். இந்த லாபத்தில் லால்கஞ் கிராமத்தில் உள்ள டஜன் கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஆதரவு அளித்து வருகிறார்.
நாட்டின் பல இடங்களில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நேரத்திலும், மனோரமாவிடம் வேலை பார்த்தவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். அவர்களுக்கு வழக்கம் போல ஊதியமும் வழங்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :