You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“சுற்றுச்சூழலுக்கு உகந்த பருத்தி நாப்கின்” - கோவை இஷானாவின் அட்டகாச முயற்சி
பதினெட்டு வயதான இஷானா மேற்படிப்பில் ஆர்வமில்லாமல் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்கிற கனவில் தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை முதலீடு செய்து பெண்களுக்கான பிரத்யேக துணிக் கடையை துவங்கியுள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவில் அதில் லாபம் கிடைக்கவில்லை.
ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 நேப்கின்கள் தயாரித்துக் கொண்டிருந்த இஷானாவின் நிறுவனம், இப்போது மாதத்திற்கு சுமார் 200 நாப்கின்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது.
துவைத்து பயன்படுத்தக் கூடிய துணி நாப்கின்களை வாடிக்கையாளர்கள் தற்போது விரும்பி வாங்கத் துவங்கியுள்ளதாக கூறும் இஷானா, 15 பெண்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளார்.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்