You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: அதிகாலையில் சோகம் - 500க்கும் மேற்பட்டோர் பலி
பிரசுரிக்கப்பட்டது
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: