You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடாவில் பார்வை இழக்கவிருக்கும் குழந்தைகள் - உலகத்தை சுற்றி காட்டும் பெற்றோர்
பிரசுரிக்கப்பட்டது
கனடாவைச் சேர்ந்த இந்த குடும்பம் நமீபியா, ஜாம்பியா, தான்சானியா, துருக்கி, மங்கோலியா மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதற்கு ஒரு பிரத்யேக காரணம் உண்டு. ஒரு நாள் எடித் மற்றும் செபஸ்டியனின் நான்கு குழந்தைகளில் மூன்று பேர் பார்வையற்றவர்களாக ஆகிவிடுவார்கள்.
மியா, கொலின் மற்றும் லாரன்ட் ஆகிய மூன்று பேரும் நிறமி மயங்கு விழித்திரை என்ற அரிய வகை மரபியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்குள் எடித்தும், செபஸ்டியனும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகத்தைச் சுற்றி காட்ட ஓர் ஆண்டு முழுவதும் உலக சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்