துருவ பகுதியில் தீவிரமாகும் கடல் மாசுபாட்டால் ஏற்படப்போகும் பேராபத்து
ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி.
ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாமல் போவதாக அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. இது 1981 முதல் 2010 வரையான ஆண்டுகளின் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் பகுதியில் பனி அடுக்குகள் சுருங்குவதற்கு, மனிதர்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சேர்வதுதான் முதன்மையான காரணம் என, கடந்த 2007ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி விரிவாக அறிய இந்த காணொளியைப் பார்க்கவும்.
பிற செய்திகள்:
- 2015ல் ரத்து செய்த சட்டப்பிரிவில் தொடர்ந்து வழக்குப் பதிவதா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி
- சிங்கப்பூரில் 10ல் 3 பேருக்கு வேலை பறிபோகலாம் என கவலை: இந்தியர்கள் மனநிலை என்ன?
- 146 ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் நிலவறையில் அடைக்கப்பட்டது உண்மையா?
- காலக்கெடுவுக்குள் வெளிநாட்டுப் படைகள் முழுவதும் வெளியேறவேண்டும் - தாலிபன்கள் கண்டிப்பு
- சாலைக்காக 30 ஆண்டுகள் நடந்த போராட்டம், ஒரு ட்வீட்டில் வெற்றி பெற்ற கதை
- பாலைவனத்தில் 100க்கு மேல் புதிய ஏவுகணை தளங்கள் அமைக்கிறதா சீனா? அணு ஆயுதங்கள் குவிக்கவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்