You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியாவில் கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு சிறை
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தின் சிவகங்கை பகுதியில் இருந்து கடந்த மாதம் வந்தடைந்த ஆடவர் மூலம் மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அவருக்கு மலேசிய நீதிமன்றம் ஐந்து மாத சிறை தண்டனையும் 12 ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த உத்தரவை மீறியுள்ளார். இதன் காரணமாக அவரிடம் இருந்து பலருக்கும் வைரஸ் தொற்று பரவியது உறுதியாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: