You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த செய்தி முகமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பிற்படுத்தப்பட்டோர் மருத்துவ இட ஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தை நாடச்சொன்ன உச்சநீதிமன்றம்
- "உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளோம்" - ரஷ்யா அறிவிப்பு
- பாதாள அறை, மலைக்க வைக்கும் அளவுக்கு பொக்கிஷங்கள் - நிர்வகிக்கும் உரிமை யாருக்கு?: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: