பழங்கால இசைக்கருவியான கின்னாரம் வாசிக்கும் கடைசி நபர்

காணொளிக் குறிப்பு, கின்னாரம் இசைக்கருவி வாசிக்கும் கடைசி நபர்
பிரசுரிக்கப்பட்டது

பழங்கால இசைக்கருவியான கின்னாரம்' கருவியை வாசிக்கும் கடைசி நபராக இருக்கிறார், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த அருணாசலம்.

தன் தந்தையிடமிருந்து இக்கலையை கற்றுக்கொண்ட அருணாசலம், கிராமங்களில் கோவலன் கூத்து பாடி வருகிறார்.

பாணர் மரபில் 'கின்னாரம்' வாசிக்கும் கடைசி நபர் அருணாசலம் தான் என்று நிறுவுகிறார் தமிழ் ஆய்வாளர் பொன்னுச்சாமி.

தயாரிப்பு: மோகன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: