You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் தற்போதைய நிலை என்ன?
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
பிபிசி தமிழ் கள ஆய்வில் கண்டது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய மக்கள் சந்திப்பின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றரை வயதுக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை உயிரிழந்திருக்கிறார்கள். சில குடும்பங்களில் மூன்று பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.
சில குடும்பங்களில், அந்தக் குடும்பத்தின் ஆதரவாக இருந்தவர்கள் உயிரிழந்து, குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது. சில இடங்களில் தங்கள் துணைவரும் குழந்தைகளும் உயிரிழந்துவிட, தனித்து விடப்பட்டு வாழ்வை எதிர்கொள்ளவே தடுமாறுகிறார்கள்.
இவர்கள் அனைவருமே மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு