தென்காசி: வேதியியல் பாடத்தை வில்லுப்பாட்டாகப் பாடும் அரசுப்பள்ளி ஆசிரியை – வீடியோ
தென்காசி: வேதியியல் பாடத்தை வில்லுப்பாட்டாகப் பாடும் அரசுப்பள்ளி ஆசிரியை – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
வேதியியல் பாடத்தை பாடலாகப் பாடி மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா?
முடியும் என்கிறார் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாலதி.
பாடல் மட்டுமல்ல, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் போன்ற கலைகள் வாயிலாக ரோபோட்டிக்ஸ், செயலி உருவாக்கம் போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார் மாலதி.
இவரது பணியைப் பாராட்டி, 2020- 2021 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி மாலதியைப் பாராட்டியுள்ளது தமிழ்நாடு அரசு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



