You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோழி மறைவை தாங்க முடியாமல் உடலுக்கு அருகே பல மணி நேரம் காத்திருந்த யானை - காணொளி
தோழி மறைவை தாங்க முடியாமல் உடலுக்கு அருகே பல மணி நேரம் காத்திருந்த யானை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
கிரைமியாவில் உள்ள டாய்கன் சிங்கப் பூங்காவில் இருந்த இரு ஆசிய யானைகள் நான்கு ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை இரண்டும் சர்க்கஸ்-ல் பணியாற்றியவை. அவற்றில் ஜென்னி என்ற யானை 54 வயதில் உடல நல கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டது.
தனது தோழி இறந்ததை தாங்க முடியாத மக்டா என்ற பெயர் கொண்ட மற்றொரு யானை, ஜென்னியை தனது தும்பிக்கையால் தொட்டு எழுப்பிட முயன்றது.
பல மணி நேரம் தனது தோழியிடன் உடலுக்கு அருகிலேயே காத்து கிடந்தது. இந்தக் காட்சிகளை டாய்கன் சிங்கப் பூங்கா வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு