RCB vs CSK: ஆர்சிபியின் எழுச்சிக்கு யார் காரணம்? சிஎஸ்கே செய்த தவறுகள் என்ன?
விராட் கோலியின் கண்களில் ஏறக்குறைய கண்ணீரே வந்துவிட்டது. டுப்ளெஸ்ஸியால் மகிழ்ச்சியை, உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. மகேந்திர சிங் தோனியே இதுபோல் விரக்தியான மனநிலையில், யாரும் பார்த்தது இல்லை, போட்டி முடிந்தபின் அவரை யாரும் பார்க்க முடியவில்லை.
இதுபோன்று ஏராளமான உணர்ச்சிகரமான சம்பவங்கள், திருப்பங்கள், சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகள் நேற்று பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடந்தது.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி, 201 ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்று என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆனால், 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்தது. ப்ளே ஆஃப்புக்கு செல்ல முடியாமல் 10 ரன்களில் சிஎஸ்கே வெளியேறியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



