மகராஷ்டிரா பேருந்து விபத்து: பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த துயரம்

காணொளிக் குறிப்பு, மகராஷ்டிரா பேருந்து விபத்து: பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த துயரம்
மகராஷ்டிரா பேருந்து விபத்து: பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த துயரம்
பிரசுரிக்கப்பட்டது

இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா பேருந்து விபத்து

25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர். விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது.

பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இருந்து மேம்பாலத்தின் பில்லரில் பேருந்து மோதியதில் அதன் டீசல் டேங்க் வெடித்து பேருந்தில் தீப்பற்றியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: