‘அடுத்த சீசனும் வருவேன்’ - தோனி சொன்ன வார்த்தையால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நேற்றைய ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்ற நொடியை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள், போட்டிக்கு பிறகு மற்றொரு முறை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை அணியின் கேப்டன் ‘கூல்’ தோனி பேச வந்த தருணம். ஆமதாபாத் மைதானத்திலிருந்த ஒரு லட்சம் இதயங்களில் இருந்த அந்த ஒரு கேள்வியை ரசிகர்களின் சார்பாக தோனியிடம் முன்வைத்தார் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே.
“கடந்தமுறை நீங்கள் தோற்றபோது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். சிஎஸ்கே என்ற பெரிய பாரம்பரிய அடையாளத்தை உருவாக்கி விட்டு செல்கிறீர்களா என்று நான் கேட்ட போது, நான் இன்னும் செல்லவில்லை, இங்குதான் இருக்கிறேன் என்று சொன்னீர்கள்,” என்று ஹர்ஷா போக்லே தோனியிடம் சொன்னார்.
அதற்கு தோனி பதிலளித்தபோது மைதானமே ‘தோனி, தோனி’ என்ற முழக்கத்தில் மூழ்கியது.
“என் மீது அன்பு வைத்த ரசிகர்களுக்கு நான் திருப்பி அளிக்கும் பரிசு, அவர்களுக்காக இன்னும் ஒரு சீசஸ் விளையாடுவதுதான்,“ என்று தனது ஓய்வு குறித்த முடிவை மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



