4 மாதமேயான இந்தியாவின் இளம் கோடீஸ்வரரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
4 மாதமேயான இந்தியாவின் இளம் கோடீஸ்வரரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
பிறந்த 4 மாதங்களே ஆன ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
இந்தத் தகவல், சமீபத்தில் வெளியான பங்குப் பரிமாற்ற ஒழுங்குமுறைத் தாக்கல் ஆவணங்களில் இருந்து தெரியவதுள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்த முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



