குஜராத்: பைக்கில் சென்றவர் மீது மோதிய மாடுகள் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
குஜராத்: பைக்கில் சென்றவர் மீது மோதிய மாடுகள் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

சாலையில் நடுவே இரண்டு மாடுகளுக்கு இடையே நடந்த சண்டையில் வாகன ஒட்டி ஒருவர் காயமடைந்துள்ளார்.

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரில் தெருவில் சுற்றித் திரியும் இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதியதில் கீழே விழுந்த அவருக்குச் சிறிது காயம் ஏற்பட்டது.

மொடசா நகரில் வாகன ஓட்டிகள், கால்நடைகள் இடையிலான மோதல் தொடர்ந்து நடந்து வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)