நீதி கேட்டு போராடும் மணிப்பூர் இளைஞர்கள் - அமைதியை நிலைநாட்டுவதில் அரசு தோற்றுவிட்டதா?
நீதி கேட்டு போராடும் மணிப்பூர் இளைஞர்கள் - அமைதியை நிலைநாட்டுவதில் அரசு தோற்றுவிட்டதா?
பிரசுரிக்கப்பட்டது
லம்கா நகரத்தில் உள்ள நினைவுச் சுவரின் முன்பாக 2000 இளைஞர்கள் கூடினார்கள்.
இயல்பு வாழ்க்கையும் அமைதியும் திரும்ப அரசு எடுத்த அமைதிக்கான முன்னெடுப்புகள் தோல்வியில் முடிந்ததற்கு தங்கள் அதிருப்தியைக் காட்ட அவர்கள் அங்கு கூடினர்.

இங்கு பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடந்த மே மாதம் முதல் வாரம் முதல் குகி, மெய்தேய் சமூகங்களுக்கு இடையில் தொடங்கிய மோதல் வன்முறையாக வெடித்தது.
அந்த மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது நடந்து வரும் மோதல்கள் இரு சமூகத்தினருக்கு இடையிலும் கடுமையான பிளவை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



