கோலியை நெருங்கிய இளைஞர் யார்? களத்திற்குள் அத்துமீறி நுழைந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, கோலியை நெருங்கிய இளைஞர் யார்? களத்திற்குள் அத்துமீறி நுழைந்தது எப்படி?
கோலியை நெருங்கிய இளைஞர் யார்? களத்திற்குள் அத்துமீறி நுழைந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​பார்வையாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார்.

பாலத்தீன கொடி இடம்பெற்ற முகக் கவசமும், பாலத்தீன விடுதலை (Free Palestine), பாலத்தீனம் மீது குண்டுவீசுவதை நிறுத்துங்கள் (Stop Bombing in Palestine) ஆகிய வாசகங்கள் இடம்பெற்ற டி சர்ட்டுடனும் கையில் கொடியுடனும் அவர் காட்சியளித்தார்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மைதானத்திற்குள் நுழைந்த அந்த நபரின் பெயர் தெரியவந்துள்ளது. அவர் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்திற்கு போலிசாரால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)