40,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் சிறுமியின் காது எலும்பு கண்டெடுப்பு

காணொளிக் குறிப்பு, நியாண்டர்தால் மனிதர்களுக்கு இரக்க குணம் இருந்ததா?
40,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் சிறுமியின் காது எலும்பு கண்டெடுப்பு
பிரசுரிக்கப்பட்டது

நியாண்டர்தால் காலத்தைச் சேர்ந்த 6 வயது மிக்க சிறுமியின் காது எலும்பு ஒன்றை புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.

நியாண்டர்தால் மனிதர்களின் காது எலும்பு கிடைப்பது அரிய நிகழ்வாகும். பொதுவாக மண்டையோடு, பல் அல்லது கால் எலும்புகள் மட்டுமே கிடைக்கும்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் மனித படிமங்கள் தொல்லியல்சார் முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தாலும், இந்தக் காது பகுதி மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)