மோடிக்கு எதிராக சீறும் பிரியங்கா காந்தி : காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்துமா?

மோடிக்கு எதிராக சீறும் பிரியங்கா காந்தி : காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்துமா?
பிரசுரிக்கப்பட்டது

மோடி விவகாரத்தில் தனது சகோதரர் ராகுல் காந்திக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரியங்கா காந்தி மிகவும் சீற்றத்துடன் தொடர்ந்து பேசிவருகிறார். அவருடைய இந்த பெரும் எதிர்வினைகள் காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை, என் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள், என்னை சிறையில் அடையுங்கள், தியாகியின் மகனை துரோகி என்றுக் கூறுகிறார்கள் போன்ற பல காட்டமான வார்த்தைகளை பிரியங்கா காந்தி கடந்த மூன்று நாட்களாக கூறிவருகிறார்.

பிரியங்கா காந்தியின் இந்த எழுச்சி, காங்கிரஸ் கட்சிக்குள் அவரது செல்வாக்கை அதிகப்படுத்துமா, கட்சிக்குள் மாற்றங்கள் வர காரணமாக அமையுமா என்பது போன்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: